Tuesday, November 19, 2013

உத்தவ கீதை - 3

உத்தவ கீதை - 3


விட்டில் பூச்சி,
விளக்கின் ஒளி விரைந்தழைக்க அதனோடு விளையாடித் தன்
வாழ்வை இழக்கும்; அதுபோல் மக்கள் பிறபொருட்கள் மேல் 
பற்று கொண்டால் அழிவர் என்பது விட்டில் பூச்சி எனக்கு
வழங்கியப் பாடம்;

தேனீ, மலர் தோறும் பறந்து தேன் சேகரிக்க ஒருநாள் வேடன் அத்
தேனை அபகரித்துக்கொள்கிறான்; தேனைச் சேகரித்தத் தேனீ 
தேனைப் பருகாமலேயே அதை இழப்பது போல்,தேவைக்கதிகமாய் 
தேடிப் பொருளீட்டி வைத்தால் இழக்க நேரிடுமேன்பதைத்
தேனீ எனக்குச் சொல்லித் தந்தது;

யானை
வலிமையுடன் வனத்தில் இருந்தாலும்,
ஆண் ஆனைக்கு பெண் ஆனை மேல் ஆலாதிப் பிரியம்.
ஆனையைப் பிடிக்க எண்ணுவோர் ஆண் ஆனை வரும் பாதையில் பெண்
ஆனையை நிற்கவைத்து இடையில் அகண்ட பள்ளம் தோண்டி யானையை
அகப்பட வைப்பார்; 
அதுபோல் பெண் பின் சுற்றுபவர் துயரில் அகப்பட்டு வருந்த நேரிடுமென்ற பாடம்
ஆனை எனக்கு அறிவுறுத்தியது;

வேடன்
தேனடைகளை வேட்டையாடி வருமானமீட்டி வாழ்வான்;
தேவைகதிகமாய்த் தேடி வைத்த பொருளைத் தேனீ வேடனிடம் இழப்பதுபோல்,
தான் அனுபவிக்காது உலோபி ஈட்டி வைக்கும் பொருளை யாரோ எடுத்துக்கொள்வர்;
வேடனிடம் சீடனாய் இருந்து கற்றப் பாடம்;

மான்.
இனிய இசை ஒலிக்கும் திக்கு நோக்கித் தன் இரு காதுகளையும் நீட்டி மெய் மறந்து நிற்கும் மான்இதுவே தக்க தருணமென்று இமை மூடும் நேரத்தில் வலை வீசிப் பிடிப்பர் ஆண்.இறைவனின் சிந்தை இல்லா வேறெதிலும் எண்ணம் செலுத்தினால் இதுபோல் அவதி நேருமென்று  சொல்லித் தந்தது மான்;கற்றுக் கொண்டது நான்;


அவதூதர் அரசன் யதுவிற்கு 
அறிவித்ததை துவாரகையின் அரசன் கண்ணன் தன்
அன்பிற்குப் பாத்திரமான உத்தவருக்கு அறிவுருத்தினான்;

மீன்,
தூண்டில் புழுவை உண்ண விரும்பி வாய் திறக்கும்;
தூண்டிலில் சிக்கி இறக்கும்;
வாயினைக் கட்டுப்படுத்தாது போனால் வருந்திச் சாக நேரிடும் என்றெனக்குச் சொல்லித் தந்தது மீன்;

பிங்களா 
எனும் விலை மாது,பெரிய விலை கேட்பாள்; 
தன் உடல் விருந்து வைப்பாள்; 
நாள்பட நாள்பட அவள் கெட்ட பணம் தர ஆருக்கும் மனமில்லை;
அங்ஙனம் மனமிருப்போரிடம் பணமில்லை;
உறங்காது உடல் விற்று உயிர் வாழ்வதைத் துறந்து,மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து
அவர் பக்தையாகிப் போனாள்;
கெட்ட வழி துறந்து நல்ல வழியில் செல்வதே நல்லது என்பது பிங்களா எனக்குச் சொல்லித் தந்தப் பாடம்;

'குரரம்' எனும் குருவி
மாமிசம் ஒன்றைக் கண்டு கவ்விப் பறந்தது;
மாமிசத்தின் மீது மையல் கொண்ட பருந்துகள்குருவியைத் துரத்தின;
ஆசைபட்டப் பொருளை அப்படியே தூர வீசிவிட்டு அங்கிருந்து பறந்தது குருவி;
அதனாலே உயிர் தப்பியது;
ஆசை கொண்டு ஒரு பொருளை அணைத்துக் கிடந்தாள் அதனால் இன்பம் கிட்டாது,
துன்பமே கிட்டும் என்று 'குரரம்' என்ற அந்தக் குருவி குருவாய் இருந்து எனக்குச் சொல்லித் தந்தது;

சிறுவன்,
சிறுக் கவலை கூட இல்லாது, ஆடிப் பாடி ஓடி விளையாடுகிறான்;
பொறாமை, வெறுப்பு, சூழ்ச்சி போன்ற எந்தத் தீயக் குணமும் மனதில் கொள்ளான்;
எப்பொழுதும் நல்லவனாய் மகிழ்ச்சியாய் இருக்கிறான்; அதுபோல்
இருப்பார்க்கு அனவிரதமும் இன்பம் கிட்டும் என்பதைச் சிறுவனிடம் நான் கற்றப் பாடம்;

 பெண் 
தன்னை மணம் பேச வந்தவர்க்கு உணவு சமைக்க நெல் குத்தினாள் பெண் ஒருத்தி;
கையில் இருந்த வளையல்கலெல்லாம் கலகல என ஒலியெழுப்ப,ஒன்று ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றெல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டாள்;
இதிலிருந்து, ஒன்றாய் எல்லாரும் உரைக்க சண்டை மூளும்;
ஒன்று மட்டும் தனித்திருந்தால் அமைதி தரும் என்று கன்னி எனக்குக் கற்பித்தாள் பாடம்;

கொல்லன்,
தன் பட்டறையில் தன் வேலையில்,கண்ணும் கருத்துமாக,வேறு சிந்தனை ஏதுமின்றி,
எப்படி உழைக்கிறானோ அப்படி இறைவன் மேல் எப்பொழுதும் 
கவனம் கொண்டு செயல்பட்டால் கவலை இல்லாது கரையேறலாம் என்று
கொல்லன் எனக்குக் கற்பித்தான்;

பாம்பு,
தனியாய் வசிக்கும்;
ஆள் ஆரவாரம் கேட்டால் அக்கணமே அங்கிருந்து ஓடிவிடும்;
அதுபோல் தனியே அதிகம் பேசாதுஅடக்கமாக வாழ்.
பாம்பு சொல்லித் தந்தப் பாடம் இது;

பட்டுப் பூச்சி
பட்டு நூல்களை உற்பத்தி செய்து வலை பின்னுகிறது, பின்னொரு நாளில் பின்னிய வலையைத் தானே தின்னுகிறது; 
படைக்கும் பொருள் அனைத்தையும் பிரளயக் காலத்தில் பரம்பொருளே அழிக்கிறார்;
பட்டுப் பூச்சி கற்றுத் தந்தப் பாடமிது;

குளவி
தன் கூட்டில்  புழுவை அடைத்து அதைச் சுற்றி ஒலி எழுப்பும்;
குளவியின் ஒலி கேட்டு வளரும் புழு குளவியாகவே உருவெடுக்கும்;
அதுபோல் ஆண்டவனை எண்ணியே அனுதினமும் இருப்போர் ஆண்டவனாகவே வாழ்வர் என்பது குளவி எனக்குக் குருவாய் இருந்துக் 
கற்பித்தப் பாடம்;

இவ்வாறு இந்த 
இருபத்தி நான்கு குருக்களிடமிருந்து 
இருக்கையில் எப்படி இருப்பது என்று கற்றுக்கொண்டேன் என
இனிய அவதூதர் சொல்லி முடித்தார்;
இன்னொன்றையும் தொடர்ந்து சொன்னார்;
இந்தச் சரீரம் நமக்கு இன்ப துன்பத்தை அளிக்கிறது;
இறப்பு பிறப்பு இதில் பிணைந்து இருக்கிறது;
இதனால் விவேகம், வைராக்கியம் கிடைப்பதனாலே 
இவ் உடலும் எனக்கு ஒரு குரு ஆனது;

துவாரகை மன்னன் ஸ்ரீ கிருஷ்ணன் தன் நண்பன் உத்தவனுக்கு 
உரைத்த இந்த அறிவுரைகளே உத்தவ கீதை எனப்படும்;

                                                                        ( கீதை முடிந்தது )


                                                                 


Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்
                 
ஓம் சிவசிவ ஓம்
Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  
Be Good & Do Good

No comments:

Post a Comment